Archives

gravatar

"கலைஞர் டிவி' அலுவலகத்தில் ரெய்டு !!


"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக, சென்னை அறிவாலயத்தில் உள்ள ஆளுங்கட்சியின், "கலைஞர் டிவி' அலுவலகத்தில், சி.பி.ஐ., ரெய்டு நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றது.

தொலைத் தொடர்புத் துறையின், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்குப் பின், சி.பி.ஐ., பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் 200 கோடி ரூபாய், தி.மு.க.,வின் சொந்த "டிவி'யான "கலைஞர் டிவி'க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., எந்த நேரமும் விசாரணை அல்லது ரெய்டு நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், "கலைஞர் டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும், 2009ல் "கலைஞர் டிவி' மற்றும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கடன் பரிவர்த்தனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, கடனாகப் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டோம்' என்றார். "இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும், "கலைஞர் டிவி' நிறுவன ஆவணங்களை சோதனையிடலாம்' என்றும் அறிவித்தார். இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்திச் சென்றுள்ளனர். சி.பி.ஐ., கோர்ட்டில் அனுமதி பெற்று இரண்டு பிரிவாக சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னை வந்தனர்.

கூடுதல் டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில், இரவு 8:30 மணிக்கு, சென்னை வந்திறங்கிய முதல் குழு, சென்னையில் உள்ள சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் துணையுடன், உடனே தேனாம்பேட்டை, அண்ணாசாலையில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ள அறிவாலய வளாகத்திற்குள் நுழைந்தது. இவர்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட, "கலைஞர் டிவி' நிர்வாகிகளில் ஒருவரான அமிர்தம், நிர்வாக இயக்குனர் சரத்குமார், துணை தலைவர் ஹுமாயூன் ஆகியோர், அதிகாரிகளிடம் பேசி, தற்போது ரெய்டு நடத்தினால், இதர மீடியாக்களுக்கு தகவல் தெரிந்து பிரச்னையாகிவிடும் என்பதால், இரவு 11 மணிக்கு வருமாறு கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டாவது குழு டில்லியில் இருந்து வந்தது. டில்லி அதிகாரிகள் ஐந்து பேர் மற்றும் சென்னை அதிகாரிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்திற்குள் இரவு 11:30 மணிக்கு உள்ளே நுழைந்தனர். அதே நேரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அங்கு வந்தார். ரெய்டு விவகாரம் கேள்விப்பட்டு, மற்ற மீடியாக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அறிவாலய வளாகத்தை சுற்றிலும், கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில், சி.பி.ஐ., அதிகாரிகள், அனைவரது மொபைல் போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டதுடன், அலுவலக போன்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின், அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியதுடன், அலுவலகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டு பதிவு செய்ததுடன், அதற்கான ஆவணங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்திற்கு வழங்கப்படும் வாடகை, ஊழியர்கள் சம்பளம், வருவாய் தொடர்பான கேள்விகளையும் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். மேலும், பல முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இரவு 11:30க்கு துவங்கி, காலை 5:30 மணி வரை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகளில் சிலர், ஆவணங்களை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு, நேராக விமான நிலையம் சென்று, டில்லி புறப்பட்டனர். மீதமுள்ளவர்கள், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வந்து, தங்கள் பணிகளை முடித்துவிட்டு, அடுத்த விமானத்தில் டில்லி புறப்பட்டுச் சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்குள்ளேயே சி.பி.ஐ., நுழைந்துள்ளதை அடுத்து, அடுத்த, "டார்கெட்' யார் என்ற பதட்டத்தில் தி.மு.க., வட்டாரம் தவித்து வருகிறது.
கண்துடைப்பா? : தங்களுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க., தலைவரின் குடும்ப, "டிவி'யான "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியிருப்பது, தி.மு.க.,வை தங்கள் பிடியில் வைத்திருக்க, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடகம் என்று ஒருபுறம் பேசப்படுகிறது. மேலும், "கலைஞர் டிவி' நிர்வாகம், அறிக்கை விட்ட பின், சி.பி.ஐ., வந்துள்ளதால் கண்துடைப்பிற்காக ரெய்டு நடத்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
நேரத்தை மாற்றிய சி.பி.ஐ.,; கலங்கியது "கலைஞர் டிவி': சி.பி.ஐ., ரெய்டு என்றாலே, பொதுவாக, எப்படி இருக்குமோ, என்ன கேட்பார்களோ? என்ற கலக்கம் இருக்கும். ஆனால், "கலைஞர் டிவி' நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும், வந்து சோதனை நடத்தலாம் என்று வலிய வந்து தெரிவித்திருந்தாலும், எப்போது வருவார்களோ, என்ற பயம் அவர்களிடத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக, சி.பி.ஐ., அதிகாரிகள் காலை நேரத்தில் தங்கள் ரெய்டை துவக்குவது வழக்கம் என்பதால், ஒரு வேளை நேற்று காலை சி.பி.ஐ., அதிகாரிகள் வரலாம் என, "கலைஞர் டிவி' நிர்வாகம் நினைத்துள்ளது. ஆனால், நேற்று முன்தினம் இரவே திடீரென அதிகாரிகள் விசிட் சென்றது, "கலைஞர் டிவி' வட்டாரத்தை கலங்கடித்துள்ளது. அதன் பின்பே, மீடியாவை காரணம் காட்டி, அவர்களை 11 மணிக்கு வரச்சொல்லி அனுப்பியுள்ளனர். மற்ற இடங்களில் அதிரடியாக நுழைந்து நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ., காலம் தாழ்த்தி மீண்டும் வந்ததன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"சம்மன் வரவில்லை': சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகள் நல வாரியக் கூட்டத்தில், கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், நிருபர்களின் கேள்விகளுக்கு கனிமொழி அளித்த பதில்:

சி.பி.ஐ.,யிடம் இருந்து உங்களுக்கு சம்மன் வந்துள்ளதா?
இதுவரை எதுவும் எனக்கு வரவில்லை.

* "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து?
அதுபற்றி தெரியாது.

* இந்த ரெய்டுகள், தி.மு.க., - காங்., இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 
சிக்கலை ஏற்படுத்துமா?
அதுபற்றி எனக்கு தெரியாது. இவ்விஷயத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

gravatar

சுவிஸ் வங்கி கருப்பு பணம் அள்ளப்போவது யார் ?


சுவிஸ் வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கருப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது.

“கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை’ என்று பா.ஜ., தலைவர் அத்வானியும், “மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை செய்திருக்கலாமே’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தேர்தலில் இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த அவர், “”சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். கருப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,” என்று கூறியிருந்தார்.

வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர். குற்றவாளிகளின் பணம்: இதுதவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர் லாந்தில், 200 க்கும் மேற்ப்பட்ட வங்கிகள் உள்ளன. இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட் சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை. அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது. கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை. எண் அடிப்படையில் கணக்கு: சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல் எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும். ஆகவே வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு. இந்தியாவில் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கி கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது. வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும் கேட்டிருந்தது. 20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது. ஜெர்மனியின் பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார் என்றும் அந்நாடு கூறியிருக்கிறது.

அத்வானி கருத்து: இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, “ஜெர்மனியிடம் இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். கடந்த ஓராண்டாகத்தான் கருப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும் ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும் பா.ஜ., குற்றம்சாட்டுகிறது.

இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவரப்படுமானால், ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது. கருப்புப் பணத்தின் புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த கருப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை முடமாக்கவும்தான் பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.

இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும் பலரது வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள். எந்த நாடு அதிகம்… இந்தியா – ரூ.75 லட்சம் கோடி ரஷ்யா – ரூ.25 லட்சம் கோடி பிரிட்டன் – ரூ.20 லட்சம் கோடி உக்ரைன் – ரூ.5லட்சம் கோடி சீனா – ரூ. 4.8 லட்சம் கோடி.........

யார் கொன்றுவருவார்கள் இந்த பணத்தையெல்லாம் ...
இல்ல இந்த பணம் , கௌண்டமணி நம்ம வடக்குப்பட்டி ராமசாமிட்ட கொடுத்தது போல ஆகிடுமா!!!
உ ........ஊ   .............
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : Gandhi Vellaichamy , உங்களுக்காக
  
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

gravatar

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது..ஜெயலலிதா தீர்மானம்..

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும்னு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவள் நான்....போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என் எப்பவும் சொல்லுபவள்.......உண்மையிலேயே நான் தமிழ் இன எதிர்ப்பாளன்......நான் மட்டுமல்ல என் சகோ சுப்ரமணிய சாமி....எங்க பாரதிய ஜனதா.....ஆக மொத்தம்......எங்க ஐய்யர் கூட்டம்....எல்லாம் தான்????.....மக்கா ...இந்த சீமான்...வைகோ......நெடுமாறன்......இன்னும் பல காசு பாக்குற பார்ட்டிக எல்லாம் என்னைய முதல்வர் ஆக்கியே தீருவோம்னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க.......அது ஒன்னும் இல்ல.....எல்லாம் இந்த காசு ....காசு பண்ற வேலைதாங்க......அப்படி நான் என்னத்த பண்ணிட்டேன்......இப்ப வேற புதுசா வந்த அந்த குடிகார பயலும்தான்....என்ன நான் சொல்லுவது புரிந்ததா!!!!!!!.....எல்லாருக்கும் குடுக்கிற அளவுக்கு பணமும் இருக்குது,,,,அதுக்கு மேலயும் இருக்குது......அப்ப நான்தானே கோடிஸ்வரி.......எல்லோரும் கருணாநிதி கிட்ட தான் அவ்வளவ்வு பணம் இருக்குதுன்னு சொல்றாங்க.......நான் எவ்வளவவு நல்லவ பாருங்க ....... எங்கிட்ட அப்படி என்ன இருக்குது.....


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நன்றி : காதலியின் கள்வன் கள்வன்  




----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

gravatar

மஹிந்த ராஜபக்ஷ பற்றிய திடுக்கிடும் ரகசியம் ?

மஹிந்த ராஜபக்ஷ தினமும் அதிகாலை 4 மணிக்கு அலரி மாளிகையிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்த பின்னரே தனது நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் சுகதேகியாக இருப்பதாகவும் தனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஜனாதிபதி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தனது இளைய சகோதரருடன் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.

இதன்போது சில விஷமிகள் ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று ஒரு போலியான தகவலை வெளியிட்டனர். அதனையடுத்து ஜனாதிபதி நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நாடெங்கிலும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது.

நாடு திரும்பிய ஜனாதிபதியிடம் இதுபற்றி அனைவரும் முறைப்பாடு செய்ததை அடுத்த நான் சுகதேகியாக இருக்கிறேன். எனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அதிகாலையில் ஜனாதிபதி உண்மையிலேயே சுகதேகியாக இருக்கிறாரா என்பதை நேரில் கண்டறிவதற்காக இருதினங்களுக்கு முன்னர் திடீரென்று சிங்களப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அலரிமாளிகைக்குச் சென்ற போது ஜனாதிபதி தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதைப் கண்டுள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : Cartoonist Bala 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

gravatar

கருப்பு பண உலகின் தாதா... மும்பையை கலக்கும் மிகப்பெரும் கான் ..


புனே நகரில் ஒரு குதிரைப் பண்ணை வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்துவரும் இவன், சுவிஸ் வங்கியின் பல்வேறு (நபர்களின்) கணக்குகளில் கொண்டு சென்று குவித்த பணம் 8 பில்லியன் டாலர்கள்! ஆங்கில கணக்குப்படி ஒரு பில்லியன் என்றால் இந்திய கணக்கில் நூறு கோடி. ஒரு டாலருக்கு ரூ.45 என்று வைத்துக்கொ்ள்ளுங்கள். இவர் நாடு கடத்திய பணம் இந்திய ரூபாயில் 4,500 கோடி!

இவ்வளவு பணம் கடத்தி சுவிஸ் வங்கிக் கணக்கில் போட்ட இந்த மகான் அதற்காக பெற்ற கமிஷன் வருவாய் தொடர்பாக வருமான வரி எதுவும் செலுத்தவில்லை. செலுத்தவில்லை என்றால் எப்படி? வருமான வரி விவரமே தாக்கல் செய்யவில்லை!

இவரைப் பற்றி அறிந்ததும் வருமான வரித்துறையும், சட்ட அமலாக்கப் பிரிவும் (Enforcement Directorate), சுவிஸ் அரசிற்கு கடிதம் எழுதின. “இவர் இந்தியாவில் இருந்து எவ்வளவு பணத்தை அங்கு கொண்டு வந்த சேர்த்தார் என்ற விவரங்களைத் தாருங்கள், இவர் இந்தியாவில் வருமான வரி செலுத்தவில்லை, அதற்கான விவரம் கூட தாக்கல் செய்யவில்லை. அது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம்” என்று கூறி, விவரம் கேட்டன.

வந்தது பதில். “வருமான விவரம் தாக்கல் செய்யாமை உங்கள் நாட்டில் குற்றமாக இருக்கலாம், எங்கள் நாட்டில் (சுவிட்சர்லாந்தில்) குற்றமில்லை. எனவே அந்நாரை பற்றிய விவரம் எதுவும் தர முடியாது” என்று அந்த ஜனநாயக நாடு பதில் போட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் ஹசன் அலி கான் வீட்டில் சோதனை நடத்தியபோது சிக்கிய ஆவணங்களையும் அந்தக் கடிதத்தோடு சுவிஸ் அரசிற்கு அனுப்பி வைத்தார்கள். அதனை போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் (Forged documents) என்று சுவிஸ் அரசு கூறி நிராகரித்துவிட்டதாம். என்னே பரிதாபம் இந்திய நாட்டிற்கு! அதற்கு மேல் வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ‘அட போடா’ என்று விட்டுவிட்டார்கள்.

இவர் நாடு கடத்திய பணத்திற்கு வருமான வரி மட்டும் எவ்வளவு செலுத்தியிருக்க வேண்டும் தெரியுமா? கபாலி கான் ரேஞ்சுக்கு கதை விடலையப்பா, மத்திய அரசு பிரபல ராஜ்சபாவில் சொன்னது: ரூ.50,000 கோடி. வட்டியோடு, தாமத அபராதம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் ரூ.70,000 கோடி!

ஹசன் அலி கான் புனேயில் ஜாலியாக குதிரை பண்ணை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நபர்களே பார்க்க முடியாத மில்லினியர்களை எளிதில் நெருங்ககூடியவன்..
இதுவரை இவனை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த மத்திய அரசு...
இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன ..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி :  Gandhi Vellaichamy

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

gravatar

ஒரு பிறந்த நாளும், அதன் பொருளும்.

சில மனிதர்களை நாம் சந்தித்திருக்கவே மாட்டோம், ஆனால் நம் வாழ்க்கையில்

அவர்கள் ஒரு பகுதியாக நிறைந்து கிடப்பார்கள், சில மனிதர்களிடம் நாம் பேசியிருக்கவே
மாட்டோம், ஆனால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சொற்களிலும் அவர்கள் எதிரொலிப்பார்கள், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிற முனைப்பும், வீரியமும் நிறைந்த மனிதர்களிடையே அரிதாக அவ்வப்போது சில உண்மையான மனிதர்களை நாம் சந்திக்க நேரிடும், அப்படி ஒரு
மனிதர் திரு.ராமசுப்ரமணியன்.

வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை அதிகம் பேசாமல் செயல்படுகிற 
இவரைப் போன்ற சில மனிதர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது,
மனிதம் என்பதும் அன்பு என்பதும் பொருளையும், முகங்களையும் தாண்டியது
என்கிற எளிய உண்மையை ஒரு முகம் தெரியாத சின்னஞ்சிறு குழந்தைக்காக 
அவர் அள்ளிக் கொடுத்த பொருளில் இருந்து நான் தேடிக் கண்டு கொண்டேன்.

அந்தக் குழந்தை இன்று இவ்வுலகில் இல்லை, ஆனால், பல முகம் தெரியாத
மனிதர்கள் என் வலியைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகில் இருக்கிறார்கள் என்று
அந்தக் குழந்தை அறிந்து கொண்டுதான் விடைபெற்றது, உங்கள் உழைப்பையும், 
அன்பையும் பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தையின் ஆழ்மனம் உங்கள் தலைமுறையும், நீங்களும் நலமாய் வாழ வேண்டும் என்று உறுதியாக வாழ்த்தும். 
அந்தக் குழந்தையின் புன்னகை உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் மலரும்.

வழக்கமாய் வாழ்த்த என்னிடம் சொற்கள் இல்லை, மகிழ்ச்சி நிரம்பிய கண்ணீருடனும், மிகுந்த அன்புடனும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் நிறைவடைகிறேன்  ராமசுப்ரமணியன்.

உங்கள் பிறந்த நாளில் மனிதம் தழைக்கட்டும். மழையும்,
கருணையும் பொழியட்டும் இந்த பூமியில்...........
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி :   கை.அறிவழகன் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

gravatar

இதர பிணங்கள்..


நான் அழுகவில்லை. பின் எப்படி அவ்வளவு கண்ணீர்? கண்களில் தூசி விழுந்ததைப் போல் இல்லை. அந்த உணர்வும், எரிச்சலும் கண்ணின் கருவிழியில் யாரோ மண்ணைத் தேய்த்துவிட்டுப் போனதைப் போல இருந்தது எனக்கு. கண் இருக்கும் கண்கூட்டுக்குள் ஏதோ  எரிந்து கொண்டிருக்கிறது. அல்லது என் கன்னங்களில் இவ்வளவு நீர் வழிந்தோட வாய்ப்பில்லை.
 
என் அருகில் கிடக்கும் தட்டில் இருக்கும் இட்லியைப் பார்த்தால், நான் இங்கு அமர்ந்து மூன்று நான்கு நாட்கள் இருக்கலாம். இல்லை அதற்கு மேலும் இருக்கலாம். கடைசியாய் ஒரு குழந்தை இந்தத் தட்டையும், அதன்மேல் இட்லியையும் எனக்காக என் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனது மட்டுமே நினைவில் இருக்கிறது. அந்த தட்டின் மீதிருந்த காய்ந்த இட்லியையும், மிகவும் காய்ந்திருந்த சில்லறைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கைகளை உள்ளே விட்டு, என் கோட்டுக்குள்ளிருந்த பணப்பையை தடவிப்பார்த்தேன். உள்ளேயிருந்த பெரிய ரூபாய் நோட்டுக்களும், கடன் அட்டைகளும் அப்படியே இருந்தன. இந்தப் பக்கப் பையில் மெல்லிய புத்தகம்போல் ஒன்று இருந்தது. அநேகமாய் அது விமானச் சீட்டாய் தான் இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கோ லண்டனுக்கோ எடுத்தது என நினைக்கிறேன். பயணம் என்றைக்கு என நினைவில்லை. ஆனால் அந்த இரண்டு ஊர்களில் ஏதோ ஒன்றுக்கு போக எத்தனித்து சீட்டு எடுத்தது மட்டும் நினைவில் இருக்கிறது. எழுந்து போய் எதையாவது வாயில் போட வேண்டுமென தோன்றினாலும், ஏதோ பெரிய சோகமும், சோம்பலும், விரக்தியும் தடுத்தன. ஆனால் என்னவெனத் தெரியவில்லை. பல நாட்களாய் திறக்காத இரும்புக்கதவு துருப்பிடித்து இறுகிவதைப் போல இறுகியிருந்தன என் உதடுகள்.

உடலின் ஒவ்வொரு முனையிலும் பல கிலோ பாரத்தை உணர்ந்தேன். நகரவில்லை நான். நகரமுடியவில்லை. வாயைக் கஷ்டப்பட்டுத் திறந்து அந்த இட்லியை பிய்த்து உள்ளே போட்டேன். காய்ந்த சருகைப் போல் இருந்தது அது. வாயில் இருந்த பல நாள் எச்சில், சாக்கடையைப் போல அந்த இட்லியுடன் குழைந்து தொண்டையில் இறங்கியது. கருவேலமர சருகுகளை வைத்து உட்தொண்டையில் சிறுவர்கள் விளையாடுவது போல நரகவேதனையத் தந்தது அந்த ஒருவாய் இட்லி.

அடுத்த வாய் சாப்பிட தெம்பும் இல்லை, தைரியமும் இல்லை. என்னைச் சுற்றி எல்லாமே நகர்ந்துகொண்டிருந்தன. சில பொருட்கள் சுழன்று கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த ஓரடி நிலத்தைத் தவிர்த்து மீதி நிலம் என்னைச் சுற்றி சீரான வேகத்துடன் சுழன்றுகொண்டே இருந்தது. நான் நகரவில்லை. சுழல்பவைகளையும், நகருபவைகளையும் பார்க்கத் தொடங்கினேன். குடும்பங்கள் என்னைச் சுற்றி அவசரத்துடன் கூடிய குதூகலத்துடன் திரிந்தார்கள். கையில் இறுக்கமாய் பையைப் பிடித்தபடியும், மிகவும் இறுக்கமாய் அழகிய குழந்தைகளைப் பிடித்தபடியும் வேகமாய் ரயில்களைப் பிடிக்க நடந்துகொண்டிருந்தார்கள். நான் நகரவே இல்லை. நகருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

   திடீரென பயங்கர சத்தம். படு வேகமாய் ஒரு சில்லறை என்னருகில் இருந்த தட்டில் மேலிருந்து மோதியது. நிமிர்ந்து பார்த்தேன். என்னைப் போல் எவனோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். கோட் அணிந்திருந்தான். அங்கிருந்த மக்களுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமிரான பார்வையை கொண்டிருந்தான், அதனினும் மேலாக அலட்சியம் அவன் பார்வையிலும், உதட்டோரத்திலும் அநாயாசமாய் நடனமாடிக் கொண்டிருந்தது.

"ஏய். எழுந்திரு. விமானத்திற்கு ஒரு மணி நேரம் தான் உள்ளது. பிச்சையெடுத்தது போதும். எழுந்து வா."

"பிச்சையா?" எனச் சொல்லிவிட்டு கோட்டினுள் கைவிட்டு சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து வெளியே போட்டேன். பின், "நான் பிச்சையெடுக்கவில்லை. ஓய்வெடுத்தபடியே கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் என் குழந்தையும் வரப் போகிறார்கள். அதோ அங்கே பறந்தோடி வாழும் மனிதர்களைப் போல ஆனந்தமான ரயில் பயணம் எங்களுக்குக் காத்திருக்கிறது. நீ போ. சில்லறையை எடுத்துப் போ. எனக்கு சில்லறை வேண்டாம்."
எனத் திக்கித் திணறிச் சொன்னேன்

இமைக்காமல் என்னைப் பார்த்தான். பின், "இல்லை இல்லை. உனக்குத் தேவைப்படும். எடுத்துக் கொள். மனைவியால் நிராகரிக்கப்பட்ட நீ, பிச்சைக்காரனினும் கேவலமானவன்." எனக்கூறி பலமாக சிரித்தான். அந்தச் சத்தம் என் குடலைப் புரட்டியது.
இரயில் சத்தம் எல்லாம் காணாமல் போனது. அவன் சத்தம் இடி போல் மண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது. என் மூளை வேர்விட்டிருக்கும் எனது மண்டை ஓட்டின் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்த சத்தம் நீண்டு ஒலித்தது.

"உனக்கென்ன தெரியும்? அவள் என்னை நிராகரிக்கவில்லை. வெறும் மனக்கசப்புதான். எல்லாம் சிலமணி நேரத்தில் சரியாகிவிடும். அவர்கள் வரப் போகிறார்கள். நீ போ. எனக்குத் தோன்றினால் நாங்கள் விமான நிலையம் செல்கிறோம். நீ போ"

"விவாகரத்திற்கும், மனக்கசப்புக்கும் அகராதி தெரியாதா உனக்கு? நினைவில்லையா? அல்லது இல்லாதது போல் நடிக்கிறாயா?"

"விவாகரத்தா?...... இருக்கிறது. அதனால் என்ன? எப்படியும் அவள் என்னிடம் வந்துவிடுவாள். என் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு என் நியாபகம் வரும். கண்டிப்பாய் வந்துவிடுவாள். நான் இல்லாமல் அவள் இருக்க மாட்டாள்." சொல்லிவிட்டு குனிந்து கொண்டேன்.

சில நொடிகள் சென்று நிமிர்ந்து பார்த்தேன். அவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். கண் எட்டும் தொலைவில் அவன் இல்லை. திடீரென அவளைப் பார்க்கத் தோன்றியது எனக்கு. உடலின் மூலைகளில் அங்கிங்கே ஒட்டிக் கொண்டிருந்த அனைத்து சக்தியையும் திரட்டி எழுந்தேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வேகமாய் நடக்கத் தொடங்கினேன்.

பல நாட்கள் கண் மூடிக் கிடந்ததால் வீதியின் விளக்கு வெளிச்சம் என் விழிகளைக் கொத்தித் தின்றன. என் மனமெங்கும் ஒரே எண்ணம் தான். அவளையும் என் குழந்தையையும் பார்க்க வேண்டும். இமைகளை பாதி மூடியபடியே நடந்தேன். எங்கள் வீடு இருக்கும் வீதி வந்துவிட்டது.  

பகலில் கூட மர நிழல் நிறைந்திருக்கும், எப்போதும் இருள் நிறைந்த வீதி அது. எத்தனையோ முறை இந்த வீதியில் வசிக்க பயமாய் இருப்பதாகவும், வீட்டை மாற்றுமாறும் என்னிடம் கூறியிருக்கிறாள்.  இந்த வீதியில் இருக்கும் தனிமை எனக்குப் பிடித்தமாய் இருந்தது. எங்கள் காதலை அது முழுமையாய் ஆதரிப்பதைப் போல் தோன்றியது. வெளியுலகின் அசுத்தங்களில் இருந்து எங்கள் காதலை அம்மரங்கள் சுத்திகரிப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தேன் நான். அதனால் வீட்டை மாற்றும் முடிவை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். எனைப் பிரிந்த இந்த ஒரு மாதமாக அவள் மட்டும் எப்படி தனியே இருக்கிறாள் எனத் தெரியவில்லை.

இதோ.. எங்கள் வீடு வந்துவிட்டது. முன்வாசல் வழியே செல்ல பயமாய் இருந்தது. பயம் எனச் சொல்வது எனக்கு இப்போது வெட்கத்தைத் தந்தாலும் வேறெந்த உணர்வின் பெயரையும் எனைத் தடுக்கும் அந்த உணர்வுக்குச் சூட்ட முடியவில்லை.  வீட்டின் பக்கவாட்டில் நின்றபடி வரவேற்பறையின் சன்னலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கண்ணாடி சன்னல் மூடியபடி இருந்தது. உள்ளே மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அவள் உருவம் நகருவது நிழலாடியது. நிழலாய் தெரிந்தாள் அவள்.

அநேகமாய் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பாள் என நினைக்கிறேன்.  கைப்பையை கழட்டி மேஜையில் வைத்தாள். அவள் அசைவுகள் வெறும் நிழலாய்த் தெரிந்தாலும் அதை என்னை முற்றிலும் மறந்து முழுதாய் ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது. அவன் மீண்டும் வந்துவிட்டான்.

"இங்கே வருவாயென தெரியும். என்ன செய்கிறாள் உன் முன்னாள் மனைவி?"

"அலுவலகத்தில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறாள். தூங்கப்போவாள். வேறென்ன செய்வாள்? களைப்பாய் இருக்கிறாள்"

ஒருநொடி அமைதியாய் என்னைப் பார்த்தான். பின்,
"தூங்கத்தான் போகிறாள் என உறுதியாய்த் தெரியுமா?" என மிகவும் மெலிதான குரலில் சலனமேயில்லாமல் கேட்டான் அவன்.

நிமிர்ந்து சன்னலைப் பார்த்தேன். என் மனைவி நகர்ந்து கொண்டிருந்தாள். அவளின் மெல்லிய இடையில் தடித்த இரு கைகள் இறுகிப் பற்றியபடி இருந்தன. அவள் இடையை முழுதாய் அணைத்தபடி, அவளின் கழுத்தை ஒட்டி முகம் புதைத்து, ஒரு பெரிய நிழல் அவளை மேஜையில் சாய்த்தது. அந்நிழல் செய்வதற்கெல்லாம், இவள் ஒரு காமத்தில் நெளியும் பாம்பு போல இசைந்து கொண்டிருந்தாள். இருவரும் மிக மெதுவாய் அசைந்து கொண்டிருந்தார்கள். அந்நிழல் அவள் மீது முழுதாய்ப் பரவி இருட்டைப் பரப்பிக் கொண்டிருந்தது. எனக்கு மூச்சு நொடிக்கு இருநூறு முறை வெளியேறியது.

என் அருகில் இருப்பவனைப் பார்க்கத் திராணியற்று இருந்தேன். அவனோ சலனமே இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். என் கைகள் நடுங்கத் தொடங்கின. வீட்டின் முன்வாசலுக்குச் சென்றேன். படியேறினென். கதவும் அவர்களின் உடைகளும் திறதிருந்தபடியே என்னை வரவேற்றன.

அவர்கள் என்னைப் பார்த்தார்கள். மங்களான வெளிச்சத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்த உறுப்புக்களை மறைக்க அவசரமாய் எத்தனித்தார்கள். பாவமாய் இருந்தது. அவன் மறைத்தான் சரி. இவள் ஏன் எனைக் கண்டதும் மறைக்கிறாள்? அவன் பார்க்கும் போதுதானே மறைத்திருக்க வேண்டும்? யோசிக்க நேரமில்லை. அந்த நேரத்தில் அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. அவனுக்கு முழுதாய் கட்டுப்பட்டிருந்த என் மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. என் கோபம் முற்றிலும் நீங்கியிருந்தது. அவள், அவனுக்கு அடிமைப்பட்டிருந்த அவளது உடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு விடுதலை கொடுப்பது என் கடமையென உணர்ந்தேன்.

வீட்டின் உட்புகுந்த சில நொடிகளில், மேஜையில் இருந்த ஒரு பெரிய கத்தியை, கனிந்த பழத்துக்குள் இறக்குவதைப் போல மிருதுவாக அவன் உடலில் மூன்று முறை இறக்கினேன். சிறிய சத்தத்துடன் இறந்தே கிழே விழுந்தான். கத்தி அவனுள் சொருகி இறுகியிருந்தது. சில நிமிடங்களுக்கு முன் என் மனைவியின் உடலில் பரவியிருந்தவன், ஊற்றிய திரவம் போல தரையில் பரவியிருந்தான். அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள், கத்திக் கொண்டிருந்தாள். உயிர் போவதைப் பார்த்தால் யார்தான் கத்த மாட்டார்கள்? அவள் கத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருப்பினும் அவளைக் கட்டி அணைத்து ஆசுவாசப்படுத்தி அவள் பயத்தைப் போக்க முயற்சித்தேன். அவள் மூச்சுக்காற்று சில நொடிகளில் ஓரளவிற்கு சீரானது.

பின் கடமையை உணர்ந்தவனாய், மெதுவாக அவளது கழுத்தைச் சுற்றி பற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த ரத்தம் நிரம்பிய நரம்புகளை கைகளால் அழுத்தமாகப் பிடுங்கி வெளியே இழுத்தேன். அவள் உடலின் மொத்த ரத்தமும் சில நொடிகளில் வெளியேறின. தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூனை மேலிருந்து கீழே போட்டதைப் போல கீழே விழுந்து காலியாக உடைந்தாள்.  

சில நொடிகள் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்தேன். உள்ளே சென்ற போது இருந்த வெட்கமும், அவமானமும் மறைந்திருந்தது. அவனைப் பார்ப்பதற்காக சுற்றும் முற்றும் தேடினேன். அவனிடம் என் மனைவி விடுதலையான கதையைச் சொல்ல வேண்டுமென துடித்தேன். ஆனால் அவன் எனக்காக காத்திருக்கவில்லை. சற்று தொலைவில் என் குழந்தையை மார்போடு அணைத்து சுமந்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அநேகமாய் அவன் ரயில் நிலையமோ, விமானநிலையமோ சென்றுகொண்டிருக்கிறான் என நினைக்கிறேன். அவனை அழைக்கத் தோன்றவில்லை. அவன் நடந்துகொண்டே இருந்தான். அவன் தொலைவில் மறைய மறைய, நான் காணாமல் போய்க் கொண்டிருந்தேன்......
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி :  Don Ashok

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

gravatar

அந்தமான் நிகோபார் தீவுகள் தனி நாடா? ஆய்வாளர்கள் திகைப்பு!!


சர்வதேச நாணயவியலாளர்களை ஏமாற்றுவதற்காக அந்தமான் நிகோபார் தீவுகள் என்ற பெயரில், நாணயங்களைத் தயாரித்து மோசடி பேர்வழிகள் சிலர் வெளியிட்டுள்ளனர். நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் வகையிலான இந்த மோசடி வேலையில் ஈடுபட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய நாணயவியலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவின் ஒரு பகுதி. இதுவரை இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயங்களே இங்கு புழக்கத்தில் உள்ளன. ஆனால், இப்போது, "அந்தமான் நிகோபார் தீவுகள்' என்ற பெயரில் புதிய வகை நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்தத் தீவுகளின் பெயரில் சமீபத்தில் வெளியாகியுள்ள, இரட்டை உலோகங்களில் செய்யப்பட்ட இரண்டு நாணயங்கள் உட்பட ஏழு வகை நாணயங்களைக் கண்டு, நாணயவியல் ஆய்வாளர்கள் வியப்படைந்துள்ளனர். தெற்காசிய நாணயங்கள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான், இவற்றை நாணயவியல் ஆய்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மோசடி வேலைகளில் ஈடுபடும் சிலரே இந்த வேலையைச் செய்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகள் என்ற பெயரில் நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இந்த நாணயங்களுக்கான படிவ அச்சுக்களை தயார் செய்வதற்கான லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்துள்ளனர். இதன் மூலம் நாணயம் தயாரித்து, உலக முழுவதும் உள்ள நாணயவியல் ஆய்வாளர்களை ஏமாற்ற முற்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த வகை நாணயங்கள் 10 ஆயிரம் "செட்கள்' தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆன்-லைன் ஏல நிறுவனத்தில், இந்த வகை நாணயம் ஒன்றின் மதிப்பு 29.50 டாலர். 10 ஆயிரம் நாணயங்களின் மதிப்பு, 1 கோடியே 34 லட்சத்து 51 ஆயிரத்து 999 மற்றும் 55 பைசா). இந்த நாணயங்களின் தலைப்பக்கத்தில் அந்தமான் நிகோபார் தீவுகள் என்ற பெயரும், கொடியுடன் கூடிய சிங்கமும், ஆண்டைக் குறிக்கும் வகையில் 2011ம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயங்களின் மறு பக்கத்தில், அதாவது 20 ரூபாய் முகமதிப்பு கொண்ட நாணயத்தில், நத்தை வகை சார்ந்த ஒரு வகை மீனின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயத்தில் கடல் விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது. ஐந்து ரூபாய் நாணயத்தில் காட்டுப் பன்றியின் படமும், 2 ரூபாய் நாணயத்தில் தென்னம்பூவின் படமும், 1 ரூபாய் நாணயத்தில் பல்லியின் படமும் பொறிக்கப்பட்டுள்ளது. 50 பைசா நாணயத்தில் மீன்கொத்திப் பறவையின் படமும், 25 பைசா நாணயத்தில் பட்டாம்பூச்சிகளின் படமும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தில் ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் இந்தி மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற நாணயங்களை வாங்குவது, நாணயவியலாளர்களின் தனிப்பட்ட உரிமை. இருந்தாலும், ஒரு அபாயகரமான போக்கு, நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் செயல். அதனால், சட்ட விரோதமாக இது போன்ற நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டவர்கள் மீது, மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாணயவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : தினமலர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

gravatar

முற்போக்குவாதிகளின் ‘’பிற்போக்கு” பெண்ணியம்


காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணோடு உறவு என்பதோடு நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் மிகப்பெரிய சவால்.

தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எளிதாக சமாளிக்க முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி காதால் கேட்க முடியாத வசையின் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரம் கிராமத்துக் பென்களுக்கு இருக்கிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை -  திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வரைமுறையற்றவை. பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இங்கே இருக்கிறது.  பெண்ணியம் பேசுகிற பெண் தானே என்று தவறாக நடக்க முயன்று ‘புரட்சியாளர்’ ஒருவர் அடிவாங்கிய கதை தெரியும் தானே.. அந்த புரட்சிப்புலி (புலி அவருக்கு பிடிக்காதே?) இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு அடித்துக் கொண்டிருக்கிறது.

யார் என்று ஆர்வமாக இருக்கிறதா? ஷோபாசக்தி தான் அந்த புரட்சியாளர். இவர் பாலியல் சுதந்திரம் பேசுவது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. இவர்கள் தங்களது இச்சைகயை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்குத்தான் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள்.

தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்குப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை.
 
காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசி வரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.

இவர்கள் தான் அருந்ததி ராய் மீது சேறடிக்கிறார்கள். இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ம.க.இ.க. தோழர்களை நக்கலடிக்கிறார்கள்.

ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவர்களோடு போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

நன்றி :  Priya Thambi


gravatar

மீண்டும் இந்தியர்களின் உதவியை நாடுகிறது அமெரிக்கா

இந்தியாவில் மீண்டும், தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக் ஆபிஸ் புரா‌ஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க இருப்பதாக அமெரிக்காவின் முனன்ணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சிட்டிகுரூப், ஜேபி மார்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவைகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் பொருளாதாரம், சமீபத்தில் கடும் வீழ்ச்சி கண்டது. தற்போது, அதிலிருந்து மெல்ல‌ மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். விரைவில், பழைய நிலையை அடை‌ந்து விடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமி்லலை. அமெரிக்க அரசின் புதிய அவுட்சோர்சிங் கொள்கைகள் மற்றும் புதிய ஒருங்கிணைந்த வங்கிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மீண்டும், புதிய நிலையை அடைய தீர்மானித்துள்‌ளோம். இந்தியாவில், மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக்ஆபிஸ் பு‌ராஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க உள்ளதாகவும், இதன்மூலம், 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:தினமலர்
http://www.dinamalar.com/business/

gravatar

Facebook கருத்துக்கள் ?


www.tamilmaxs.com

Facebook கருத்துக்கள்

http://www.facebook.com/profile.php?id=100001408374075

Jinnah Mohamed 
ஆரம்பகால கட்டத்தில்


புலிகள் அகிம்சை முரையில் தான் போராட்டத்தை
துவக்கினார்கல் தனது கோரிக்கைகலை நிரைவேற்ற
கோரி தீலிபன் சாகும் வரையில் உண்னாவிரதம்
இறூந்தார் அவர்கோரிக்கையை ஏற்காத சிஙகள
அரசு அவரை மரணம் அடைய செய்துவிட்டது
இனி மயிளே மயிளே என்றால் இறாகு போடது
என்றூ உணர்ந்த புலிகல் இனி பிடுங்கிதாண் எடுக்க
வேண்டும் என்றூ தன் போராட்டங்களாஈ தீ விரபடு
த்தினர்




  • "ராஜிவ்காந்தி பிரதமராக இறூந்தபோது வாரம் மூன்றூ முரை சென்னை வறூவார் ஜெ வை பார்க அப்பொழுது எல்லாம் ராஜிவ்விடம் கலைகக வேண்டும் என்றுதான் கூறூவார் ஜெ வும் அடிக்கு அடி டெல்லி சென்றூ கலைக்க வேண்டும்..." 

gravatar

Facebook ல் போட்டுத்தாக்கு ?


www.tamilmaxs.com


Nesraj Suerendra : இது என்ன அநியாயம், ஈழத்தமிழன் உயிர்தான் கிடைத்துதா உங்கள் அரசியல் வாழ்வுக்கு.போதும் தமிழகமே எங்களை வாழவிடுங்கள். முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதி விட்டீர்கள்.
தமிழ் வாழ்ந்தாலும் சரி,அழிந்து செத்தாலும் சரி இனி உயிர் கொடுக்க ஈழத்தமிழனிடம் உயிரே இல்லை.
ஈழத்தில் இப்போ தமிழர் இல்லை அங்கே சதை பிண்டங்கள் தான் நடமாடுகின்றன.

தயவு செய்து உங்கள் அரசியல் வாழ்வுக்காக இனி மேலாவது எங்களை பாவிப்பதை நிறுத்தி விடுங்கள்



   இதற்கு பதில் சொன்ன........


Kovi Ramanan உங்களின் இப்படியான சேவைகள் வரவேற்க படுகின்றன




Nesraj Suerendra 
நல்லது வர வேற்றுக்கொள்ளுங்கள்.
ஆனால் தமிழக அரசையும், இந்திய மத்திய அரசையும் கண்டிக்க வக்கில்லாத விஜேய் ஏன் ஈழத்தமிழரிடம் போறார்.
உண்மையின் படி தன் நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத தனது அரசை தான் கண்டிக்க வேண்டும்.
ஏன் அதை செய்ய வில்லை.
பம்மாத்து வேலை








நன்றி : Tamilmaxs,Nesraj Suerendra,Kovi Ramanan